News October 26, 2025

ராணிப்பேட்டை: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

image

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993ல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் <>விண்ணப்பிக்கலாம்<<>>. ஷேர்!

Similar News

News October 26, 2025

ராணிப்பேட்டை: இனி அலைச்சல் வேண்டாம், ஒரு மெசேஜ் போதும்!

image

ராணிப்பேட்டை மக்களே கேஸ் சிலிண்டரை புக்கிங் செய்ய போனில் இருந்து ஒரு SMS அனுப்பினாலே போதும். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இதுவே பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்பி கேஸ் சிலிண்டரை ஈசியாக புக்கிங் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News October 26, 2025

அரக்கோணம்: வீடே அதிரக் கேட்ட சத்தம்..!!

image

ராணிப்பேட்டை: கீழாந்தூர் கிராமம், பெரிய தெருவை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவரது வீட்டில் நேற்று (அக்.25) கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதே நேரம் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. காஸ் சிலிண்டர் வெடி விபத்து குறித்து அரக்கோணம் வட்டாட்சியர் மற்றும் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

News October 26, 2025

ராணிப்பேட்டையில் கோரவிபத்து, இருவர் பலி

image

ராணிப்பேட்டையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், வாலாஜா அணைக்கட்டில் நீர்மட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த மணிகண்டன்(22), அருண்(21) விடுமுறையை ஒட்டி குளிக்க பூண்டி கிராமம் அருகே சென்றதாக கூறப்படுகிறது. பின் குளிக்க இருவரும் நீரில் இறங்கும் பொது, நீரின் வேகம் அதிகமான நிலையில் இருவரும் அடுத்து செல்லப்பட்டனர். மேலும் போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!