News September 21, 2025

ராணிப்பேட்டை: இரு போலி மருத்துவர்கள் கைது

image

ராணிப்பேட்டை மாவட்டம், வள்ளுவம்பாக்கம் கிராமத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் ஒருவர் மருத்துவம் பார்ப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், மருத்துவத்துறையினர் மற்றும் வாலாஜா போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வள்ளுவம்பாக்கம் மற்றும் ஒழுகூரைச் சேர்ந்த ஜெயவேலு, திருநாவுக்கரசு ஆகிய இருவர் போலி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News September 21, 2025

ராணிப்பேட்டை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

ராணிப்பேட்டை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். இந்த <>இணையதளத்தில் <<>>அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க

News September 21, 2025

ராணிப்பேட்டை: தேர்வு இல்லாமல் தமிழக அரசு வேலை!

image

ராணிப்பேட்டை மக்களே..! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 375 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. பணி: ஓட்டுநர், அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர், இரவு காவலர்
2. கல்வி தகுதி: 8 & 10-ம் வகுப்பு
3. சம்பளம்: ரூ.15,900 – ரூ.62,000
4. விண்ணப்பிக்க இங்கே <>Click <<>>செய்க,
5. கடைசி தேதி: 30.09.2025
அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..

News September 21, 2025

ராணிப்பேட்டை: லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் கைது

image

ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பேரூராட்சி பகுதியில் நிலம் அளப்பதற்காக லஞ்சமாக ரூ.37,000 கேட்ட நில அளவையர் சித்ராவை, ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். நில உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில், நேற்று (செப்டம்பர் 20) சித்ராவை லஞ்சம் வாங்கியபோது டிஎஸ்பி கணேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். இது குறித்து உங்களின் கருத்து என்ன?

error: Content is protected !!