News April 25, 2024
ராணிப்பேட்டை அருகே விபத்து: ஒருவர் பலி

அரக்கோணம் அடுத்த கடம்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நித்திஷ்( 19). இவர் இன்று பைக்கில் தக்கோலம் கூட்ரோடு வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி நித்திஷ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்டது. தக்கோலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 18, 2025
ராணிப்பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் Swap Development Solutions என்ற தனியார் நிறுவனத்தில் உதவியாளருக்கான 20 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ஆம் வகுப்புக்கு கீழ் படித்திருந்தால் போதும். முன் அனுபவம் தேவை இல்லை. 18 – 40 வயதிற்குட்பட்ட இருபாலரும் வரும் ஜூன் 11ஆம் தேதிக்கு முன்னர் <
News April 18, 2025
ஒரே நாளில் 1,800 நெல் மூட்டைகள் விற்பனை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளையும் தானியங்கள், நெல் பயிர் களை கலவை – வாழைப் பந்தல் சாலையில் உள்ள ஒழுங்குமுறை கூடத்தில் விற்பனை செய்வது வழக்கம். அதன்படி நேற்று (ஏப்ரல்.17) ஒரே நாளில் 1800 நெல் மூட்டைகள் கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் குவிந்ததுஇதில் ஸ்ரீ நெல் ரகம் அதிகபட்சமாக ரூ.1,429 க்கு விற்பனை
News April 18, 2025
கோவிலில் சிலை திருடிய பெண் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே கைனூரில் உள்ள காட்டுப்பிள்ளையார் கோயிலில் வெண்கல மாணிக்கவாசகர் சிலை மற்றும் பூஜைப் பொருட்கள் திருடப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஜனனி (30) என்பவர் நேற்று (ஏப்ரல்.17) கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் போலீஸாரிடமிருந்து தப்பியோடினார். சுமார் 3 மணி நேர தேடலுக்குப் பின் பொய்ப்பாக்கம் பகுதியில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.