News April 18, 2024
ராணிப்பேட்டை அருகே விபத்து: பெண் பலி

அரக்கோணத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (எ)காளியம்மாள்( 35) இவர் இன்று அல்லியப்பன் தாங்கல் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். நாகாலம்மன் நகர் அருகில் வரும்போது நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். அப்போது எதிரே வந்த லாரி லட்சுமி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News August 18, 2025
ராணிப்பேட்டை: உங்க சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பு!

ராணிப்பேட்டையில் இயங்கி வரும் BHEL நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சியாளர் (Trade Apprentice) பணிக்கு 261 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நேர்காணல் வரும் ஆக.21 முதல் ஆக.23 வரை BHEL HRM கருத்தரங்க அறையில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ITI முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.12,000மும் குறைந்த விலையில் உணவும் வழங்கப்படும். மற்றவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!
News August 18, 2025
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை ஆட்சியர் பெற்றுக் கொண்டு அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சரண்யா தேவி, நேர்முக உதவியாளர் ஏகாம்பரம், தனித் துணை ஆட்சியர் கீதாலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
News August 18, 2025
ராணிப்பேட்டை காவல் துறையின் விழிப்புணர்வு செய்தி

ராணிப்பேட்டை காவல்துறை இன்று சமூக வலைத்தளத்தின் வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் சாலை பாதுகாப்பு குறித்து செய்தி வெளியிடப்பட்டது. இதில் “பொறுப்புள்ள ஓட்டுநராக இருங்கள் வழிப்பாதையை மாற்றும்போது உங்கள் காட்டியைப் பயன்படுத்துங்கள். தெளிவாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்..! நமது சாலைகளை அனைவருக்கும் பாதுகாப்பானதாக மாற்றுவோம்.” என மக்களுக்கு விழிப்புணர்வு செய்தி வெளியிடப்பட்டது.