News March 30, 2024
ராணிப்பேட்டை அருகே விபத்து

அரக்கோணம் அடுத்த தண்டலத்தைச் சேர்ந்தவர் சுமதி 45 இவர் கட்டிட தொழிலாளி. இன்று மதியம் சித்தேரி பஸ் ஸ்டாப் அருகில் ஓரமாக நடந்து சென்றார் அப்போது சோளிங்கரில் இருந்து அரக்கோணம் நோக்கி வந்த லாரி சுமதி மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது .அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 9, 2025
ராணிப்பேட்டை: சொத்துவரி செலுத்துவோருக்கு கட்டண சலுகை

ராணிப்பேட்டை நகராட்சி நிர்வாகம் விடுத்துள்ள அறிக்கையில் 2025-26ஆம் ஆண்டுக்கான அரையாண்டு சொத்து வரியை ஏப்ரல் 30க்குள் செலுத்தும் நபர்களுக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட கால அளவில் வரி செலுத்தாத நபர்களுக்கு ஒரு சதவீத தாமத வட்டி வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது முறையாக வரி செலுத்துவோருக்கு பயன் உள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்து.
News April 9, 2025
ராணிப்பேட்டை MRF டயர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

ராணிப்பேட்டையில் இயங்கிவரும் MRF டயர் நிறுவனத்தில் Lead Trainee பணிக்கான 100 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. BA, BSC, BBA, BCA, B.Com அல்லது Diploma ஆகிய படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.18-25 வயதுக்குள் இருக்கும் ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். ரூ.19,500 சம்பளம் வழங்கப்படும். மானிய விலையில் உணவக வசதி, மானிய போக்குவரத்து வசதி, இலவச காலனி, சீருடை வழங்கபடும். இந்த <
News April 9, 2025
பொது வினியோக திட்ட சிறப்பு முகாம் 12-ந்தேதி நடைபெறுகிறது

பொது வினியோக திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதத்திற்கான சிறப்பு முகாம் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதுதவிர பொது வினியோகத் திட்டம் தொடர்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.