News March 22, 2024

ராணிப்பேட்டை அருகே விபத்து: ஒருவர் பலி

image

ஆற்காடு அடுத்த புதுப்பாடி பாலாறு அணைக்கட்டு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரேசன் (45 ). இவர் இன்று காலை மினி லாரியில் ஜல்லிக்கற்கள் ஏற்றி கொண்டு வந்து கொண்டிருந்தார். லாடவரம் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகில் வரும்போது சாலை ஓரம் இருந்த பனைமரத்தில் நிலை தடுமாறி மினி லாரி மோதியதில் சுந்தரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

Similar News

News November 4, 2025

ராணிப்பேட்டை: ரூ.71,900 சம்பளத்துடன் அரசு வேலை!

image

தமிழத்தில் காலியாக உள்ள 1,429 HEALTH INSPECTOR பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, MPHW/ சுகாதார ஆய்வாளர் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 18-60 வயதிற்குள் இருக்க வேண்டும். இதற்கு ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும்.

News November 4, 2025

ராணிப்பேட்டை: பெற்றோர்கள் கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க !

image

ராணிப்பேட்டையில் குழந்தை மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு கருதி தமிழ்நாடு அரசு உதவி எண்களை அறிவித்து உள்ளது.
1.பெண்குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
2.பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
3.போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
4.சைபர் கிரைம் பாதுகாப்பு ( 1930 )
இந்த எங்களை Save பண்ணி வைத்துக்கோங்க! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News November 4, 2025

ராணிப்பேட்டை: முதியவர் தூக்கு மாட்டி தற்கொலை

image

ராணிப்பேட்டை,பெருமாள்ராஜபேட்டை ஆர்.என். கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ஹரி வெங்கடேஷ் 65. நேற்று நவ.03ம் தேதி அங்குள்ள விநாயகர் கோயில் அருகில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே ஹரி வெங்கடேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!