News February 22, 2026
ராணிப்பேட்டை அருகே தீப்பிடித்து எரிந்த கூரை வீடு!

இச்சிப்புத்தூரை சேர்ந்தவர் ஆதி கேசவன். இவருக்கு சொந்தமான கூரை வீடு நேற்று (பிப்ரவரி.21) தீப்பிடித்து எரிந்தது. அரக்கோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்து கேஸ் கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News February 26, 2026
ராணிப்பேட்டை: Whatsapp பண்ணுங்க.. உடனே தீர்வு!

ராணிப்பேட்டை மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க
News February 26, 2026
ராணிப்பேட்டையில் பரிதாப பலி!

பூட்டுத்தாக்கு அருகே இன்று(பிப்.26) பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அங்குள்ள தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் பலியானார். இன்னொருவர் படுகாயம் அடைந்தார் . ரத்தினகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில் இறந்த மாணவர் சத்துவாச்சாரியைச் சேர்ந்த வெற்றிவேல் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News February 26, 2026
ராணிப்பேட்டை: அனைத்து CERTIFICATES இனி Whatsapp-ல்!

ராணிப்பேட்டை மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!


