News January 22, 2026
ராணிப்பேட்டை: அரசு ஊழியர் தூக்கிட்டு தற்கொலை!

சம்பத்ராயன்பேட்டை விநாயகபுரத்தை சேர்ந்தவர் ராஜி 51. அரக்கோணம் தாலுகாவில் நில அளவைத் துறையில் சார் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நேற்று ஜன.21ம் தேதி மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நெமிலி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
Similar News
News January 27, 2026
ராணிப்பேட்டை பெண்களுக்கு ரூ.10 லட்சம்! CLICK NOW

ராணிப்பேட்டை மாவட்ட பெண்களே.., நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க, விரிவுப்படுத்த ஆசையா..? மத்திய அரசின் ’மகிளா உத்யம் நிதி யோஜனா’ திட்டம் மூலம் ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. மிகக் குறைவான வட்டி விகிதத்தில் பிணையமின்றி இந்தத் தொகை வழங்கப்படும். 10 ஆண்டுகள் வரை கடனை திருப்பி செலுத்தலாம். உடனே அருகில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியை அணுகவும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க
News January 27, 2026
ராணிப்பேட்டை நிறுவனங்களுக்கு அபராதம்!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று(ஜன.26) குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள், கடைகள், உணவு நிறுவனங்கள் போன்றவைகளை தொழிலாளர் உதவி கமிஷனர் மு.வரதராஜன் தலைமையில் ஆய்வு செய்தனர். இதில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் விடுமுறை அளிக்காத 85 நிறுவனங்களுக்கு இணக்க கட்டண அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
News January 27, 2026
அரக்கோணத்தில் அதிரடி கைது!

ராணிப்பேட்டை: அரக்கோணம் தாலுகா போலீசார் நேற்று(ஜன.26) தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கோணலம் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் திரிந்த பெண்ணைப் பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த நேத்ராவதி(37) என்பதும், கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்றதும் தெரிய வந்தது. மேலும், அவரிடமிருந்த 12 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.


