News September 9, 2024
ராணிப்பேட்டையில் 7 புதிய பதவிகள்

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு சத்துணவுத் திட்ட செயலாக்கத்திற்கான புதியதாக பணியிடங்கள் தோற்றுவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 7 பதவிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. விரைவில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய பதவிகளுக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
Similar News
News September 7, 2025
ராணிப்பேட்டையில் சனி தோஷம் நீங்க இங்க போங்க!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இருந்து 3 கி.மீ தொலைவில் மங்கம்மா பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற மங்கள ஸ்ரீ சனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் சிறப்பே சனீஸ்வரர் திருகல்யாண கோலத்தில் இருப்பதுதான். இங்கு சென்று வழிபட்டால் சனி தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News September 7, 2025
ராணிப்பேட்டை: உங்க போன்ல இந்த நம்பர் இருக்கா?

ராணிப்பேட்டை மக்களே, அவசர காலத்தில் உதவும் எண்கள்: ▶ தீயணைப்புத் துறை – 101 ▶ ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 ▶ போக்குவரத்து காவலர் -103 ▶ பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 ▶ ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 ▶ சாலை விபத்து அவசர சேவை – 1073 ▶ பேரிடர் கால உதவி – 1077 ▶ குழந்தைகள் பாதுகாப்பு – 1098 ▶ சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 ▶ மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News September 7, 2025
அரசு தேர்வில் வெல்ல வேண்டுமா? இத பண்ணுங்க

ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் இங்கு வரும் செப்.9, 13, மற்றும் 20 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு மாதிரி தேர்வுகள் நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்பும் நபர்கள் 04172- 291400 எண்ணை அழைத்து தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.