News December 12, 2025

ராணிப்பேட்டையில் 18 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் திட்டத்தின் கீழ் 18 மருந்தகங்கள் திறக்கப்பட்டு, ₹21 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் 12 மருந்தகங்களும், தொழில்முனைவோர் மூலம் 6 மருந்தகங்களும் திறக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தத் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. மாவட்டத்தில் அணைத்து மக்களும் உதவும் வகையில் அமைந்துள்ளது என மாவட்ட துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Similar News

News March 8, 2026

ராணிப்பேட்டை : இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3000

image

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். PM-SYM மூலம் 60 வயதுக்கு பின் ரூ.3,000 மாத பென்ஷன் பெறலாம். ஆதார், மொபைல் எண் வங்கி விவரங்களுடன் இங்கே <>கிளிக்<<>> செய்து இலவசமாக பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க.

News March 8, 2026

ராணிப்பேட்டை : தனிமையில் போக பயமா? கவலை வேண்டாம்!

image

ராணிப்பேட்டை மக்களே.., மகளிர் பாதுகாபிற்காக அரசு அறிமுகப்படுத்திய செயலி காவல் உதவி. வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என உணர்ந்தால் இந்த செயலியில் உள்ள பொத்தானை அமுக்கினால் போதும், போலீஸ் உதவி உங்களைத் தேடி வரும். மேலும், குடும்பத்தில், பணியிடத்தில் அச்சுறுத்தல், வன்முறை நிகழ்ந்தால் உடனே 181-ஐ அழைக்கலாம். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்.

News March 8, 2026

ராணிப்பேட்டை: கட்சித் தாவிய 100 பேர்

image

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றியம் ஓச்சேரி தனியார் மண்டபத்தில் நேற்று மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. பா.ம.க. மாநில மாணவரணி துணை செயலாளர் ஒச்சேரி பழனி, அதிமுகவைச் சேர்ந்த அருண், திபன், குப்பன் உள்ளிட்ட பலர் அமைச்சர் காந்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!