News March 26, 2026
ராணிப்பேட்டையில் பெட்ரோல் காலியா? இதை பண்ணுங்க!

ராணிப்பேட்டை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கிருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News April 9, 2026
சோளிங்கரில் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை

ராணிப்பேட்டை: சோளிங்கரில் நேற்று(ஏப்.8) மாலை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் சு. ரவி மற்றும் சோளிங்கர் தொகுதி பாமக வேட்பாளர் சரவணன் ஆகியோரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
News April 9, 2026
ஆற்காடு அருகே ஒருவர் கொடூர பலி!

ராணிப்பேட்டை: ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டையில் இருந்து வேலூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற நபரின் மீது அடையாளம் தெரியாத கனரக வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் உடல் சிதறி கொடூரமாக உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News April 9, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல்.8) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


