News January 12, 2026

ராணிப்பேட்டையில் பயங்கர தகராறு!

image

கந்திலி அருகே உள்ள பெரியகரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவரது மனைவி சகுந்தலா(35). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரிக்கும் முன் விரோதம் இருந்து வந்ததி. நேற்று முன் தினம் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்த புகாரில் மகேஸ்வரி, காமராஜ், சகுந்தலா, உறவினர் ராஜ்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News January 30, 2026

ராணிப்பேட்டையில் டாஸ்மாக் இயங்காது!

image

ராணிப்பேட்டையில் நாளை மறு நாள் (பிப்.1) வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள், நட்சத்திர உணவகங்களில் உள்ள மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படுமென மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News January 30, 2026

ராணிப்பேட்டையில் இன்று மின் தடை!

image

ராணிப்பேட்டையில் இன்று(ஜன.30) காலை 9:00 – மாலை 5:00 மணி வரை திமிரி, விளாப்பாக்கம், ஆனைமல்லூர், காவனூர், தாமரைப்பாக்கம், சாத்தூர், வளையத்தூர், மோசூர், பாலமதி, புங்கனூர், பழையனூர், சக்கரமல்லூர், கடப்பந்தாங்கல், கிளாம்பாடி, லாடபுரம், கீரம்பாடி, புதுப்பாடி, மாங்காடு, மழையூர், தி.புதூர், பின்னத்தாங்கல், வளையாத்தூர், நல்லூர், அல்லாச்சேரி, கலவை நகரம் ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 30, 2026

ராணிப்பேட்டையில் ரயில் மோதி கொடூர பலி!

image

புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே நேற்று(ஜன.29) ரயில் மோதி ஒருவர் இறந்து கிடந்தார். அரக்கோணம் ரயில்வே போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் விசாரணையில் சித்தேரி பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது அந்த வழியாக வந்த மின்சார ரயில் மோதி இறந்தது தெரியவந்தது.

error: Content is protected !!