News February 6, 2026

ராணிப்பேட்டையில் துடிதுடித்து பலி!

image

புலிவலம் பகுதியில் நேற்று (பிப்.5) இரவு புல்லட் ஒன்று புதரில் விழுந்து கிடந்தது. இதில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரை அப்பகுதி மக்கள் மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பெற்று வந்த அந்நபர் இன்று (பிப்.6) உயிரிழந்தார். இது குறித்து கொண்டபாளையம் போலீசார் விசாரித்ததில் அந்நபர் நந்திமங்கலத்தை சேர்ந்த முருகன் (42) என்பது தெரிய வந்தது.

Similar News

News February 13, 2026

தேசிய பேரிடர் மீட்பு படை தளத்தில் நாய் பயிற்சி நிறைவு விழா

image

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை தளத்தில் நேற்று (பிப்.12) நாய் பயிற்சி பள்ளி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. இதில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த நாய் அணிகள் மற்றும் கையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பேரிடர் நேரங்களில் தேடுதல், மீட்பு திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த பயிற்சி நடைபெற்றது. இதில் அதிகாரிகள் பலர் பங்கேற்று பாராட்டினர்.

News February 13, 2026

ராணிப்பேட்டையில் கன்னி வெடி; பயங்கர ஷாக்!

image

ரத்தனகிரியில் சட்ட விரோதமாக கன்னி வெடி கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நேற்று முன்தினம், மாங்குப்பம் மலையடிவாரம் அருகே, டூ-வீலரில் வந்த 3 வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் வேலுலூரை சேர்ந்த சுதாகர் (30) பிரபாகரன் (28) கார்த்தி (23) கடியாம் 33 என்பதும் கண்ணி வெடிகள் வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

News February 13, 2026

ராணிப்பேட்டையில் கூண்டோடு கைது!

image

ராணிப்பேட்டையில் நாடு தழுவிய மறியல் போராட்டத்தின் எதிரொலியாய் நேற்று (பிப்.12) கலவை பஸ் நிலையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய சங்கம் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், மத்திய அரசின் விவசாய தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்தும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 65 பேரை கலவை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!