News January 30, 2026
ராணிப்பேட்டையில் டாஸ்மாக் இயங்காது!

ராணிப்பேட்டையில் நாளை மறு நாள் (பிப்.1) வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுக்கூடங்கள், நட்சத்திர உணவகங்களில் உள்ள மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்படுமென மாவட்ட கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Similar News
News February 8, 2026
ராணிப்பேட்டை: வாங்கியதும் பிரச்சனை; கைவிரித்த HP!

ராணிப்பேட்டையை சேர்ந்த குமரன், கடந்த ஆகஸ்ட் மாதம் தனியார் டிஜிட்டல் ஷோரூமில் ரூ.50,000-க்கு HP laptop வாங்கி உள்ளார். அனால் வாங்கி 7 மாதத்திற்குள் laptop repair ஆகியது. இதுகுறித்து புகார் அளித்தும் ஷோரூம் நிர்வாகிகள் மற்றும் HP Care centre முறையான நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்து விட்டு, தற்போது waranty முடிந்துவிட்டது என கை விரித்துள்ளனர். இது பற்றிய அவரின் கதறல் Viral-ஆகி வருகிறது.
News February 8, 2026
அரக்கோணத்தில் துணிகர சம்பவம்!

அரக்கோணம் சாஸ்திரி நகரை சேர்ந்த தம்பதி ஜெயக்குமார், சத்தியவாணி. இந்நிலையில் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்ற சத்த்யவாணி, வந்து பார்த்த போது பீரோ அருகே நகைகள் கீழே விழுந்து இருந்ததாம். மேலும் பீரோவில் இருந்த ரூ. 25 லட்சம் மதிப்பிலான 25 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இது குறித்து புகார் பெற்ற அரக்கோணம் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 8, 2026
ராணிப்பேட்டையில் செல்லும் வழியில் பிரசவம்!

வாலாஜாவை அடுத்த ஆயிலத்தை சேர்ந்த தம்பதி லாரன்ஸ்- இந்திராணி (22). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு நேற்று அதிகாலை (பிப்.7) திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டது. உடனே அவர் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே 3: 30 மணிக்கு இந்திராணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


