News July 5, 2024

ராணிப்பேட்டையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம்

image

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை, மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக் கொள்ள ஏதுவாக வழக்காடிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் 29.7.2024 முதல் 3.8.2024 வரை ஒரு வாரம் ராணிப்பேட்டையில் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, வட்ட சட்டப் பணிகள் குழுவினை 04172-230877 எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் நேற்று தெரிவித்துள்ளது.

Similar News

News November 9, 2025

ராணிப்பேட்டை: பொதுமக்களுக்கு GOOD NEWS!

image

ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்தில், கடந்த சில மாதங்களாக அந்த இடத்தில் கால அட்டவணை பலகை இல்லாமல் இருந்தது. இதனால் பஸ்கள் வந்து செல்லும் நேரம் தெரியாமல் பயணிகள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் (நவ.7) பஸ் வந்து செல்லும் நேரம் குறித்த அறிவிப்பு பலகையை அமைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News November 9, 2025

ராணிப்பேட்டை: அரசு பேருந்தை சிறைபிடித்த மக்கள்.!

image

ராணிப்பேட்டை, ரெட்டிவலம் அருகே நேற்று முன்தினம் (நவ. 7) அரக்கோணம் நோக்கிச் சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதியதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்தைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பேருந்தை சிறைப்பிடித்து, கண்டக்டர் மற்றும் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், பேருந்து காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News November 9, 2025

ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (நவ.8) இரவு 10 மணி முதல் இன்று (நவ.9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின், அவசர காலத்திற்கு தங்களது உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!