News July 23, 2024

ராணிப்பேட்டையில் ஆலோசனைக் கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சாலை பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கோட்ட பொறியாளர்களான செல்வகுமார், சுந்தரி மதன்குமார், லட்சுமி காந்தன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News September 12, 2025

ராணிப்பேட்டை: ரூ. 1000 பெற, இந்த 5 ஆவணங்கள் போதும்!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த லிங்கில் <>கிளிக் <<>>செய்து ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News September 12, 2025

ராணிப்பேட்டை: 8ஆம் வகுப்பு போதும்! நல்ல சம்பளத்தில் வேலை

image

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள எழுத்தர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவு காவலாளி உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணிக்கு ஏற்ப 8 முதல் 10ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். பணியின் அடிப்படையில் ரூ.15,700 – ரூ.Rs.71,900 வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் ரூ.100. விருப்பமுடையவர்கள் வரும் செப்.30க்குள் இந்த <>இணையத்தில் <<>>விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News September 12, 2025

ராணிப்பேட்டையில் நாளை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

image

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு சந்திரகலா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வருகின்ற சனிக்கிழமை செப்டம்பர் 13 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதில் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற குறைகளைத் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!