News April 19, 2025

ராணிப்பேட்டையில் ஆதி மனிதர்களின் ரகசிய கல்குகை

image

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆதிமனிதர்கள் வசித்த கல்குகை ஒன்று அமைந்துள்ளது. இங்கு செல்ல அடர்ந்த காட்டை கடக்க வேண்டும். சோளிங்கர் பெரிய மலைக்கு நேர் எதிரே அமைந்துள்ளது. இந்த குகையில் ஆதி மனிதர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இது திருடன் குகை எனவும் அழைக்கப்படுகிறது. மலை உச்சியில் முழுக்க முழுக்க கற்களால் இந்த குகை கட்டப்பட்டுள்ளது. ட்ரெக்கிங் செல்ல இது ஒரு சிறந்த இடமாக உள்ளது.ஷேர் செய்யுங்கள்

Similar News

News November 12, 2025

ராணிப்பேட்டை: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்!

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News November 12, 2025

ராணிப்பேட்டையில் நாளை மின் தடை

image

ராணிப்பேட்டையில் நகரம், ஆடோ நகர், வீ.சி.மோட்டூர் , ஜெயராம் நகர், பழைய ஆற்காடு சாலை, காந்தி நகர், மேல் புதுப்பேட்டை, பிஞ்சி, அல்லிக்குளம், சின்ன தகரகுப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை(நவ.13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 12, 2025

அரக்கோணத்தில் போலி சான்றிதழ்!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் மத்திய தொழிற் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்வாகும் ஆண், பெண் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில் இருந்து தேர்வான சர்ஜீத்(23) என்பவரய்து சான்றிதழ்களில் இருப்பிட சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!