News August 8, 2025
ராணிப்பேட்டைக்கு கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இன்று (ஆகஸ்ட் 8) ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!
Similar News
News August 8, 2025
ராணிப்பேட்டை SBI வங்கியில் வேலை…

SBI வங்கியில் Customer Support மற்றும் Sales பிரிவில் உள்ள ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5,180 பணியிடங்கள். தமிழ்நாட்டிற்கு 380 காலிப்பணியிடங்கள். 20 – 28 வயதுடைய டிகிரி படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த <
News August 8, 2025
ராணிப்பேட்டை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 9) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது அந்தந்த வட்டாச்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. இதில் மின்னணு குடும்ப அட்டையில் பெயர், முகவரி திருத்தம், உறுப்பினர் சேர்க்கை, புகைப்பட பதிவேற்றம் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News August 8, 2025
ராணிப்பேட்டை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், சீனிவாசன்பேட்டை, சோளிங்கர், வாலாஜா ஆகிய இடங்களில் இன்று (ஆகஸ்ட்-08) நடக்க இருக்கிறது. இந்த முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுவாக வழங்கலாம். குறிப்பாக, மகளிர் உதவித்தொகை பெற முடியாத பெண்கள் உரிய ஆவணங்களோடு இந்த முகாமில் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க