News January 13, 2026
ராணிபேட்டையில் பன்றி வெடி!

ரத்தனகிரி அருகே டிசி குப்பம் சாணார்பெண்டை கிராமத்தில் பன்றி வெடி பொருட்கள் இருவர் வைத்துள்ளனர் என கிராம மக்கள் ரத்னகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரை சேர்ந்த பிரபாகரன், கார்த்தி ஆகிய இருவரை நேற்று(ஜன.12) கைது செய்தனர். அவர்களிடம் எவ்வளவு பன்றி வெடி மருந்துகள் உள்ளது, என விசாரணை நடத்துகின்றனர்.
Similar News
News January 29, 2026
அரக்கோணத்தில் இருளில் மூழ்கிய மக்கள்!

ராணிப்பேட்டை; அரக்கோணம் மின் கோட்டம் இச்சிபுத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வாணியம்பேட்டை, பால கிருஷ்ணாபுரம், முசல் நாயுடு கண்டிகை, அரக்கோணம் நகர எல்லை பகுதிகளான ராகவேந்திரா நகர், நாகம்மாள் நகர், கைனூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று(ஜன.28) மாலை மின் தடை ஏற்பட்டது. சுமார் 6 மணி நேரமாக அப்பகுதிகள் இருளில் மூழ்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
News January 29, 2026
அரக்கோணத்தில் அதிரடி கைது!

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த வேடல் – மின்னல் சாலை போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேடல் காந்தி நகர் பகுதியில் 2 வாலிபர்களிடம் மடக்கி விசாரித்ததில், அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. உடனே நேதாஜி(29), கோடீஸ்வரன்(22) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
News January 29, 2026
ராணிப்பேட்டை: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன-28) இரவு 10 மணி முதல் இன்று (ஜன.29) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


