News August 4, 2024
ராஜேந்திர சோழனால் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

கீழையூர் பகுதியில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் கோயிலில், பண்டைய கால 6 கல்வெட்டு தூண்கள் நேற்று (ஆகஸ்ட் 3) தென்பட்டுள்ளன. கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்ததில், அவை 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராஜேந்திர சோழனால் கல்வெட்டுகள் ஆகும். அதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சில ஊர்களின் பெயர்களும், தானமாக வழங்கப்பட்ட பொன் – பொருள் விவரங்களும் எழுதப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
க.குறிச்சி: ஆட்சியரகத்தில் தற்கொலை முயற்சி!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(நவ.3) பொதுமக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் மனு அளிக்க வந்த மல்லாபுரத்தைச் சார்ந்த தர்மலிங்கம் என்பவர் சொத்துகளை கிரய ஆவணப்படி உட்பிரிவு செய்து, தனிப்பட்டாவாக மாற்ற வலியுறுத்தி பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
News November 4, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் நல உதவி!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(நவ.3) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெற்ற மனுக்களின் அடிப்படையில் ஒருவருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 2 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலி, 3 பேருக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், ஒருவருக்கு ஒளிரும் மடக்கு குச்சி மற்றும் செல்போன் என மொத்தம் 7 பேருக்கு 1.61 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
News November 4, 2025
கள்ளக்குறிச்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(நவ.3) வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத்தொகை, தெரு மின்விளக்கு அமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 412, மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து 5 என மொத்தமாக 417 மனுக்கள் பெறப்பட்டது.


