News March 1, 2026
ராஜபாளையம்: வீட்டின் பூட்டை உடைத்து 70கி நகை திருட்டு

ராஜபாளையம் அருகே செண்பகத்தோப்பு சாலை ராம்நகரைச் சேர்ந்தவர் இமானுவேல். இவா் அரசு மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்பனராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவர் குடும்பத்துடன் தென்காசிக்குச் சென்ற நிலையில் இரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் பீரோவில் இருந்த 70 கிராம் தங்க நகைகளை திருடிச் சென்றனா். இது குறித்து வடக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News April 11, 2026
சிவகாசி: சரக்கு வேன் மோதி இளைஞர் பரிதாப பலி.!

சிவகாசி எம்.ஜி.ஆர்.காலனியை சேர்ந்தவர் அழகுராஜா (வயது 25). இவர் சிவகாசி – விருதுநகர் ரோட்டில் டூவீலரில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் அழகுராஜா மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது பற்றி திருத்தங்கல் போலீஸ் விசாரிக்கின்றனர்.
News April 11, 2026
சாத்தூர்: பட்டாசு ஆலை உரிமையாளர் வீட்டில் சோதனை

விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள செல்லையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி, மணிகண்டன். சகோதரர்களான இவர்களுக்கு சொந்தமாக ஐந்து பட்டாசு ஆலைகள் மற்றும் 10 பட்டாசு கடைகள், லாட்ஜ் உள்ளிட்டவைகள் உள்ளன. இங்கு இரவு 10 மணி வரை வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News April 11, 2026
சாத்தூர்: பட்டாசு ஆலை உரிமையாளர் வீட்டில் சோதனை

விருதுநகர் மாவட்டம், ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள செல்லையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி, மணிகண்டன். சகோதரர்களான இவர்களுக்கு சொந்தமாக ஐந்து பட்டாசு ஆலைகள் மற்றும் 10 பட்டாசு கடைகள், லாட்ஜ் உள்ளிட்டவைகள் உள்ளன. இங்கு இரவு 10 மணி வரை வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் எந்த ஆவணமும் கைப்பற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


