News January 27, 2026
ராஜபாளையம்: ஜாமீனில் வந்தவர் தற்கொலை

ராஜபாளையம் அருகே சேத்தூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் பரமசிவம், இவருடைய மகன் வேல்முருகன். இவர்கள் இருவரையும் வசந்தகுமார் என்பவர் கொலை வழக்கில் சேத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த பரமசிவம் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சேத்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 6, 2026
விருதுநகர்: அரசு வழங்கும் இலவச வீடு – APPLY NOW..!

விருதுநகர் மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. <
News February 6, 2026
BREAKING விருதுநகர் எம்.பி பதிவால் கூட்டணியில் மோதல்?

புதுச்சேரியில் கூட்டணிக்கு திமுக தான் தலைமை தாங்க வேண்டும் என்று ஜெகத்ரட்சகனிடம் திமுக நிர்வாகிகள் வலியுறுத்துவதாக தகவல் வெளியானது. இது காங்கிரஸ் கட்சியிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கூட்டணியில் 8% ஓட்டுகளை வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா? இல்லை 26% வைத்துள்ள கட்சி தலைமை தாங்குமா? என விருதுநகர் MP மாணிக்கம் தாகூர் X தளத்தில் பதிவிட்டுள்ளது கூட்டணியில் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
News February 6, 2026
ஸ்ரீவி: தனியார் பள்ளியில் முகமூடி திருடர்கள் கைவரிசை

ஶ்ரீவி – சிவகாசி சாலையில் தனியார் பள்ளி செயல்படுகிறது. இங்கு கண்காணிப்பு கேமரா மற்றும் 24 மணி நேரமும் பாதுகாவலர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பார்த்த போது அலுவலகத்தில் இருந்த ரூ.70,000 திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள சிசிடிவிகளை ஆய்வு செய்ததில் முகமூடி அணிந்த இருவர் திருடிச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அசிரியர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.


