News January 22, 2026
ராஜபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து

ராஜபாளையம் அருகே முதுகுடி பகுதியை சோ்ந்த மலையாண்டி – சந்திரா தம்பதியினர் ஆட்டோவில் எதிா்கோட்டையில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு பின்னர் வீடு திரும்பினர். அப்போது எஸ்.ராமலிங்கபுரம் அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் மலையாண்டி, சந்திரா, ஓட்டுநா் பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் பலத்த காயமடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Similar News
News February 8, 2026
விருதுநகர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News February 8, 2026
விருதுநகர்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

விருதுநகர் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிஞ்சுக்கோங்க. ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். SHARE
News February 8, 2026
சாத்தூர் அருகே கிணற்றில் குதித்து தற்கொலை

சாத்தூர் அருகே ஸ்ரீரெங்காபுரத்தை சேர்ந்தவர் ஜேசு மனைவி முத்துக்கனி(47). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் சாத்தூர் தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


