News February 22, 2026
ராஜபாளையத்தில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு

ராஜபாளையம் அருகே ஆசிரியர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் விஜயக்குமார்(42). இவருக்கும், இவருடைய அக்காள் குருபாக்கியம்(47) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் குருபாக்கியம் வீட்டிற்குள் நுழைந்த விஜயகுமார் அவரை தலையில் அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது அவரை தடுக்க வந்த அவருடைய அக்கா மகள் ஆனந்தியையும் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 25, 2026
விருதுநகர்: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <
News February 25, 2026
ஸ்ரீவி: பேரூராட்சியில் ரூ.32 லட்சம் கையாடல் – அதிர்ச்சி

ஸ்ரீவி அருகே மம்சாபுரம் பேரூராட்சியில் நவ.2022 – நவ.2023 காலகட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸில் EX பேரூராட்சி தலைவர் ராஜா புகார் அளித்தார். அதில், பேரூராட்சியில் பல்வேறு பணிகளை செய்ததாக போலி பில் தயார் செய்து ரூ.32.78 லட்சம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து பேரூராட்சியில் பணியாற்றிய 2 செயல் அலுவலர்கள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
News February 25, 2026
விருதுநகர்: ரூ.1,20,000 வரை கடன் பெறலாம்

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். SHARE IT


