News January 12, 2026
ராஜபாளையத்தில் பூட்டை உடைத்து 9 பவுன் திருட்டு

ராஜபாளையம் அருகே ராம் நகரை சேர்ந்தவர் இம்மானுவேல்(63). வெளிநாட்டில் இருந்து வரும் தனது மகனை அழைக்க இவர் மதுரைக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டதை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Similar News
News January 28, 2026
விருதுநகர்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் வள்ளலார் இராமலிங்கனார் நினைவு தினமான 01.02.2026 அன்று ஒரு நாள் மட்டும் FL-1 / FL-2 / FL-3 / FL-3A / FL-3AA / FL-4A மற்றும் FL-11 ஆகிய மதுபான உரிமம் பெற்ற ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
விருதுநகர் : வங்கி வேலை.. ரூ. 48,000 சம்பளம்!

யூகோ வங்கியில் (UCO Bank) காலியாக உள்ள Generalist and Specialist Officers பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 173
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.48,480 – 93,960/-
5. கல்வி தகுதி: B.E/B.Tech, MBA, CA, M.Sc, MCA
6. கடைசி தேதி: 02.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 28, 2026
ஸ்ரீவி: முன்னாள் ராணுவ வீரர் கைது

சென்னை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறை தொலைப்பேசிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது, அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் எனக் கூறி இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து நடத்திய சோதனையில் அது வதந்தி என தெரியவந்தது. இதில் முன்னாள் ராணுவ வீரரான மல்லி அருகே பூவநாதபுரத்தை சேர்ந்த பாலமுருகன் மது போதையில் மிரட்டல் விடுத்தது தெரியவந்த நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.


