News April 16, 2025
ராஜபாளையத்தில் பால் வியாபாரி கொலையா?

ராஜபாளையம் அருகே புதுப்பட்டியை சேர்ந்தவர் பால் வியாபாரி சுப்பிரமணியன்(55). இவரது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி மற்றும் மகளை சுப்பிரமணியன் கண்டித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிறிது நேரத்தில் சுப்பிரமணியன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இவரது உடலை மயானத்துக்கு கொண்டு சென்ற போது அதில் ரத்த காயங்கள் இருந்தது தெரியவந்தது. போலீசார் அவரது உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 22, 2026
விருதுநகர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. குறிப்பாக மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, குடியரசு தினத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News January 22, 2026
விருதுநகர்: இந்த எண்கள் முக்கியம்., SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.விருதுநகர் – 9445000354
2.அருப்புக்கோட்டை – 9445000355
3.திருச்சுழி- 9445000356
4.ராஜபாளையம்- 9445000357
5.ஸ்ரீவில்லிபுத்தூர்- 9445000358
6.சிவகாசி- 9445000359
7.சாத்தூர்- 9445000360
8.காரியாபட்டி- 9445000361
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க
News January 22, 2026
விருதுநகர்: இனி கம்மி விலையில் புது பைக், கார், டிராக்டர்

விருதுநகர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது.<


