News December 4, 2025

ரஷ்ய நீர்மூழ்கி கப்பலை குத்தகைக்கு எடுக்கும் இந்தியா

image

ரஷ்யாவிடம் இருந்து அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை ₹17,963 கோடி மதிப்பில் 10 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது. டீசல், எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களை விட அணுசக்தியால் இயங்கும் கப்பல்கள் அதிக திறன் கொண்டவைகளாகவும் இருக்கும். இது போன்ற கப்பல்களை இந்தியா உருவாக்கும் போது, அதை இயக்க திறன்பெற்ற வீரர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக குத்தகைக்கு எடுக்கப்படுகிறது.

Similar News

News December 5, 2025

இந்தாண்டில் மக்கள் கூகுளில் அதிகம் தேடியவை (PHOTOS)

image

கூகுள், 2025-ம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், IPL முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து, வேறு எவையெல்லாம் அதிகம் தேடப்பட்டுள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. கூகுளில், நீங்கள் அதிகம் தேடியது எது? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE பண்ணுங்க.

News December 5, 2025

ஏழுமலையான் பக்தர்களின் கவனத்திற்கு..

image

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 28-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை வைகுண்ட துவார தரிசனம் நடைபெறவுள்ளது. ஜனவரி 2-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை சிறப்பு தரிசன டிக்கெட்களுக்கான (₹300) முன்பதிவு இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்கள் வெளியிடப்படும். டிக்கெட்களை பெற <>இங்கே <<>>கிளிக் செய்யவும். இப்பதிவை அனைவருக்கும் பகிருங்கள்.

News December 5, 2025

பார்லிமென்ட்டை முடக்கிய தமிழக MP-க்கள்!

image

இன்று லோக்சபா தொடங்கியது முதலே <<18473828>>திமுக MP-க்கள்<<>> திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேச வேண்டுமென அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் பேசுவதற்கு அனுமதி மறுத்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ‘நீதி வேண்டும்’ என தொடர்ந்து முழக்கமிட்ட நிலையில், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, ராஜ்யசபாவிலும் அமளியில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி MP-க்கள், வெளிநடப்பு செய்தனர்.

error: Content is protected !!