News August 13, 2024
ரவுடி ரோகித் ராஜை சுட்டுப் பிடித்த போலீஸ்

சென்னை டி.பி.சத்திரத்தில் பிரபல ரவுடி ரோகித் ராஜை போலீசார் சுட்டுப் பிடித்துள்ளனர். போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, அவர் போலீசாரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றுள்ளார். அப்போது, போலீசார் தற்காப்புக்காக அவரை சுட்டுப் பிடித்தனர். இதில் படுகாயமடைந்த அவரை, கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர், ரவுடி மயிலை சிவகுமார் கொலை உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார்.
Similar News
News September 18, 2025
BREAKING: சென்னையில் பிரபல நடிகர் காலமானார்

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இன்று (செ.18) உடல்நலக் குறைவால் காலமானார். படப்பிடிப்பில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்த அவர், துரைப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நீர்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் முன்னதாக ஏற்பட்ட மஞ்சள் காமாலை காரணமாக உடல் பலவீனமடைந்த நிலையில் இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
News September 18, 2025
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் திருவொற்றியூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் நேரடி மாணவர் சேர்க்கை செப்.30 வரை நீட்டிக்கப்படுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.இதில் 14 வயது முதல் 40 வரை உள்ள ஆண்கள் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். பயிற்சியில்
சேருபவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் கிடையாது.
News September 18, 2025
சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்.. மிஸ் பண்ணிடாதீங்க

கிண்டி ஒருங்கிணைந்த வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் நாளை (செ.19) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 2 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. 8th,12th, ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு <