News May 23, 2024
ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு

அரக்கோணத்தில் இருந்து திருவள்ளூர் செல்லும் ரயில் பாதையில் கடம்பத்தூர் செஞ்சி பானம்பாக்கம் இடையே நேற்றிரவு மின்சார ரயில் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக, அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் திருவள்ளூர் அயப்பாக்கத்தைச் சேர்ந்த டில்லி பாபு (44) என்பது தெரியவந்தது.
Similar News
News September 8, 2025
சிலிண்டர் மானிய நிலையை எளிதாக அறிய வழி

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்
News September 8, 2025
அறிவித்தார் ராணிப்பேட்டை ஆட்சியர்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில் ராணிப்பேட்டை மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் விவசாயிகள் கலந்து கொள்ளலாம். பதிவு கட்டணம் ரூபாய் 100 பதிவு செய்த பயிர்கள் வெற்றி பெறும் இரண்டு விவசாயிகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்படும் கடைசி தேதி 15.3.2026 மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண்மை விரிவாக்கம் மையத்தினை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
ராணிப்பேட்டை மாவட்டத்தில் எம்.எல்.ஏ கள் பெற்ற வாக்குகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2021 தேர்தலில் எம்.எல்.ஏ கள் பெற்ற வாக்குகள்
▶ஆர். காந்தி (தி.மு.க) – ராணிப்பேட்டை – 1,03,291 வாக்குகள்
▶எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி (தி.மு.க) -அரக்கோணம் – 1,11,885 வாக்குகள்
▶ஏ.எம். முனிரத்தினம் (காங்கிரஸ்) -சோளிங்கர் – 1,10,228 வாக்குகள்.
▶ஜே. எல். ஈஸ்வரப்பன் (தி.மு.க) -ஆற்காடு-1,03,885 வாக்குகள்.
ஷேர் பண்ணுங்க