News November 23, 2024

ரயில் மோதி மின்வாரிய பெண் ஊழியர் உயிரிழப்பு

image

திருமுல்லைவாயிலில், ரயில் மோதி மின்வாரிய ஊழியர் உயிரிழந்த பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜே.ஜே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக பணிபுரிந்த ஜோதி காமாட்சி (42), நேற்று தண்டவாளத்தைக் கடந்தபோது அரக்கோணம் ரயில் மோதி உயிரிழந்தார். 2017ஆம் ஆண்டு ஜோதி காமாட்சியின் கணவர் மாரடைப்பால் காலமான நிலையில், தனது 12 வயது மகனுடன் அவர் வசித்து வந்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 1, 2025

சென்னையில் இலவச பயிற்சி!

image

சென்னை, கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களில் உள்ள உதவியாளர் பணிக்கு 157 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டுறவு வங்கி தேர்வுக்கு சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக இன்று (செப்டம்பர் 1) முதல் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். <>தகவலுக்கு.<<>> ஷேர்!

News August 31, 2025

சென்னையில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

சென்னை மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 31) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News August 31, 2025

சென்னை: வற்றாத செல்வம் பெற இங்க போங்க!

image

சென்னை திருவல்லிக்கேணியில் பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோயில் உள்ளது. இங்கு வந்து பெருமாளை மனமுருக வேண்டினால், கணவன்- மனைவி இடையே சண்டை சச்சரவு என எதுவும் இல்லாமல் குடும்ப ஐஸ்வர்யம் மேம்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், திருமண வரம், குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம். உங்களுக்கு தெரிந்த தம்பதிகளுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!