News July 17, 2024
ரயில் மறியலில் ஈடுபட்ட 476 பேர் கைது

தமிழகத்துக்கு காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று(ஜூலை.16) பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திருவாரூர், நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்தில் ஈடுபட்ட 77 பெண்கள் உட்பட 476 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Similar News
News July 11, 2025
நெல் ஜெயராமனுக்கு சிலை; முதல்வர் அறிவிப்பு!

திருவாரூர் புதிய பேருந்து நிலையம் அருகில் எஸ் எஸ் நகரில் இன்று (ஜூலை 10) நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், தமிழக முதலவர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது உலகப் புகழ்பெற்ற திருத்துறைப்பூண்டி தேசிய நெல் திருவிழா மூலம் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் அவர்களுக்கு, திருத்துறைப்பூண்டியில் ஆள் உயர சிலை அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
News July 11, 2025
திருவாரூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (ஜூலை 10) இரவு 10 மணி முதல் நாளை(ஜூலை 11) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.
News July 10, 2025
திருவாரூக்கு புதிய திட்டங்கள்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

திருவாரூர் மாவட்டல் வருகை தந்த தமிழக முதல்வர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டர். அதில், ஜூபிலி மார்க்கெட் பகுதியில் ரூ.11 கோடியில் வணிக வளாகம், வண்டம்பாளையம் ஊராட்சியில் ரூ.56 கோடியில் மாவட்ட மாதிரி பள்ளி, மன்னார்குடியில் ரூ.18 கோடியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி மற்றும் ரூ.43 கோடியில் ஆறுகள் வாய்க்கால்கள் புனரமைப்பு, பூந்தோட்டத்தில் புறவழிச்சாலை மற்றும் நெல் ஜெயராமன் சிலை வைக்கப்படுமென அறிவித்தார்.