News March 23, 2025

ரயில் பயணிகள் கவனத்திற்கு 

image

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள நேற்று விடுத்த செய்திக்குறிப்பில், திருவனந்தபுரத்தில் இருந்து மாா்ச்28, ஏப்.4- வெள்ளியன்று புறப்பட்டு சிறப்பு ரயில் ஞாயிறன்று ஷாலிமார் நிலையத்தை சென்றடையும். மறு மாா்க்கத்தில் மாா்.31, ஏப்.7 திங்களன்று ஷாலிமாரில் புறப்பட்டு புதனன்று திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரயில் கோவை வழியாக இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News March 25, 2025

தமிழக ஆளுநர் இன்று கோவை வருகை

image

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 45வது பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று கோவை வருகிறார். காலை 8:20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்படும் அவர், காலை 9:25 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். பின், கோவை வேளாண் கல்லூரியில் நடைபெறும் பட்டமளிப்பு வழங்கும் விழாவில் கலந்து கொண்டு மாலை சென்னை திரும்புகிறார்.

News March 25, 2025

ஜெ.வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

image

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தனிப்படை முன்பு வரும் மார்.27ஆம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி கோவை சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. இதனையடுத்து அவர் அன்று ஆஜராவார் என கூறப்படுகிறது.

News March 25, 2025

கொங்கு நாட்டு விலங்கு! கின்னஸ் சாதனை

image

கேரளாவில் விவசாயி ஒருவரின் வீட்டில் வளரும் கொங்குநாடு வெள்ளாடு ஒன்று பலரும் ஆச்சரியப்பட்ட அளவிற்கு இருக்கிறது. பீட்டர் என்பவர் ஆடு, கோழி, பசு உள்ளிட்டவைகளை வளர்த்து வருகிறார். அந்த ஆடு 1 அடி 3 அங்குலம் (40.50 செ.மீ.) உயரமும், 1 அடி 1 அங்குலம் (33.5 செ.மீ.) அகலம் இருக்கிறது. இந்த ஆடு தான் உலகில் வாழும் ஆடுகளில் மிகக் குட்டையான ஆடு என அங்கீகாரம் பெற்றுள்ளது. கொங்குநாட்டு மக்களே ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!