News May 3, 2024

ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு

image

கரூர் மாவட்ட காவல்துறையின் இணையவழி குற்றத்தடுப்புப் பிரிவு சார்பில் கரூர் ரயில் நிலைய பயணிகளுக்கு இணையவழி குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் லலிதா தலைமையிலான போலீஸார் ரயில் நிலைய பயணிகளிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினர். மேலும் சைபர் கிரைம் இலவச உதவி எண் – 1930 இந்த நம்பரில் பதிவு செய்யலாம்.

Similar News

News November 7, 2025

கரூரில் இன்று பல இடங்களில் மின்தடை…!

image

கரூர் மாவட்டம்; புலியூர், புகழூர், கரூர் டவுன், அரவக்குறிச்சி, ஆண்டிச்செட்டிப்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட 6 துணை மின்நிலையங்களில் நிலையங்களில் இன்று (நவ.07) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 7, 2025

கரூரில் 3 பேர் அதிரடி கைது!

image

கரூர் மாவட்டம், குளித்தலை சிந்தாமணிப்பட்டி பகுதியில் வெளியூர் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தது தொடர்பாக மைலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மைதின் (48), கமருதீன் (58), மற்றும் குருணிக்குளத்துப்பட்டியைச் சேர்ந்த முஜீப் ரகுமான் (50) ஆகிய மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அசாம் மாநில லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 7, 2025

வாலாந்தூரில் வீட்டில் மது விற்றவர் கைது

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வாலாந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சை மகன் செந்தில்குமார் 52. இவர் தனது வீட்டில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற குளித்தலை போலீசார் மது விற்ற செந்தில்குமார் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களும் பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!