News April 29, 2024
ரயில் டிக்கெட் விற்பவர்களை கண்காணிக்க தனிப்படை

கோடை விடுமுறையையொட்டி, ரயிலில் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை பயன்படுத்தி முக்கிய நகரங்களில் முறைகேடாக டிக்கெட் விற்பனையில் ஈடுபடும் நபர்களை கண்காணிக்க ரயில்வே போலீசார் தனிப்படைகளை அமைத்துள்ளனர். சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், மேட்டூர், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் இவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Similar News
News August 23, 2025
நரம்புத்தளர்ச்சியை குணமாக்கும் சேலம் கோயில்!

சேலம் மாவட்டம், சேலத்தில் பிரசித்தி பெற்ற அழகிரிநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு, திருமண தோஷம் உள்ளவர்கள் ஆண்டாள் திருக்கல்யாணத்தை கண்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. புத்திர பாக்கியம் வேண்டி பொன்ன மரத்தின் அடியிலுள்ள சந்தான கோபாலகிருஷ்ணரை பிரார்த்தனை செய்கின்றனர். இத்தல இறைவனை வேண்டிக்கொள்ள நரம்புத்தளர்ச்சி நோய்கள் நீங்குமாம். SHARE பண்ணுங்க!
News August 23, 2025
சேலம்: டிகிரி போதும்.. ரூ.1 லட்சம் சம்பளம்!

சேலம் மக்களே, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் (LIC) காலியாக உள்ள உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் உள்ளிட்ட 841 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு முடித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 23, 2025
சேலம் விமான பயணிகளின் கவனத்திற்கு!

சேலம் மாவட்டம், காமலாபுரம் சேலம் விமான நிலையத்தில் இருந்து கொச்சின், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் மேற்கண்ட நகரங்களில் இருந்து சேலத்திற்கும் இன்று (ஆக.23) இயக்கப்படவிருந்த அலையன்ஸ் ஏர் விமான சேவைகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனை சேலம் விமான நிலையம் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளது.