News April 14, 2024

ரயில் கழிவறை குழாய்களை திருடியவர்கள் கைது

image

மதுரை கோட்டத்தில் இயங்கும் ரயில்களில் உள்ள கழிவறை குழாய்கள் அடிக்கடி திருடு போனதால், ரயில்வே போலீசார் கண்காணித்தனர். அதன்படி நேற்று சந்தேகத்திற்கு இடமாக சுற்றித் திரிந்த கோ.புதூர் ஆனந்தன், செல்வம் ஆகியோரை சோதனை செய்தனர். சோதனையில், அவர்கள் மது அருந்துவதற்காக கடந்த 2 ஆண்டுகளாக கழிவறை குழாய்களை திருடியது தெரிந்தது. இவர்கள் உட்பட குழாய்களை விலைக்கு வாங்கிய கடைக்காரர்கள் என 4 பேர் கைது செய்யப்பட்டனர்

Similar News

News November 8, 2025

மதுரை: தெப்பத்தில் தண்ணீர் நிரப்ப முடிவு

image

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத்தை சுற்றி இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தெப்பத்தில் கழிவு நீர் கலக்காமல் இருக்கவும் மாநகராட்சி மூலம் தண்ணீர் நிரப்பவும் முடிவு செய்துள்ளதாக, மதுரை வைகை நதி மக்கள் இயக்கத்தை சேர்ந்த ராஜன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு அறநிலையத் துறை பதில் அளித்துள்ளது.

News November 8, 2025

மதுரை அரசு மருத்துவமனை குப்பையால் பொதுமக்கள் அவதி

image

மதுரை அரசு மருத்துவமனையின் பின்பக்க வாசலில் மருத்துவக் கழிவுகள் அல்லாத வார்டுகளில் சேரும் உணவு பாக்கெட், குடிநீர் பாட்டில், பிற கழிவுகள் நாள்தோறும் 5 டன் அளவில் சேர்கிறது. இவற்றை உடனுக்குடன் அகற்றினால் தான் மருத்துவமனை வளாகம் சுத்தமாக இருக்கும். அருகிலேயே மார்ச்சுவரி உள்ளதால், அங்கு வருபவர்கள் குப்பையிலிருந்து வரும் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். விரைந்து நடவடிக்கை மக்கள் கோரிக்கை.

News November 8, 2025

மதுரை: EXAM இல்லாமல் வங்கி வேலை – APPLY NOW!

image

மதுரை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <>கிளிக் <<>>செய்து நவ 15.க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பவார்கள். இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!