News December 22, 2024

ரயில்வே நிர்வாகத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ மனு

image

செகந்திராபாத்தில் இருந்து திருப்பதி, வேலூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி வழியாக கொல்லம் செல்லும் ரயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல ஸ்டாப்பிங் வழங்கப்படவில்லை. இதனால் ரயில்வே நிர்வாகத்தின் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்கள் அதிருப்தி அடைந்தனர். இந்த ரயிலுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்டாப்பிங் வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீவி.எம்.எல்.ஏ.மான்ராஜ் ரயில்வே நிர்வாகத்திற்கு மனு அனுப்பி உள்ளார்.

Similar News

News October 26, 2025

விருதுநகர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

விருதுநகர் மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 26, 2025

விருதுநகர்: ரயில்வேயில் 8,850 பணியிடங்கள் அறிவிப்பு

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 8850 பணியிடங்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 12th முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.35,400 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் அக்.21-ம் தேதி முதல் www<>.rrbapply<<>>.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத வாய்ப்பை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 26, 2025

சிவகாசி பட்டாசு தொழிலாளர்களுக்கு GOOD NEWS

image

சிவகாசியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுமார் ரூ.7000 கோடிக்கு பட்டாசு விற்பனை நடைபெற்றுள்ளது. ஆனாலும் பட்டாசு உற்பத்தி பாதிப்பால் பட்டாசுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் வரும் 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுக்கான தட்டுப்பாட்டை போக்கும் வகையில், வழக்கமாக தீபாவளி முடிந்து ஒரு மாதம் கழித்து துவங்கும் பட்டாசு உற்பத்தி பணி இந்த ஆண்டு இன்னும் ஒரு சில நாட்களிலேயே துவங்க உள்ளது.

error: Content is protected !!