News June 22, 2024

ரயில்வே துறையில் அலட்சிய போக்கு

image

ரயில்வே துறைக்கு, ஐகோர்ட் மதுரை கிளை இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. “முகம் சுளிக்கும் நிலையில் தான் ரயில் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் ஓடும் ஏராளமான ரயில்களில் ஓட்டை பெட்டிகள் தான் இணைக்கப்படுகின்றன. கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் பராமரிப்பில் தொடர்ந்து அலட்சிய போக்கையே ரயில்வே துறை காட்டுகிறது ” என நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 7, 2025

மதுரை: தொலைந்த சான்றிதழ் பெறுவது இனி ரொம்ப ஈஸி..!

image

பள்ளி, கல்லூரி சான்றிதழ்கள் சேதமடைந்திருந்தாலோ, அல்லது காணாமல் போயிருந்தாலோ அதனை எளிதாக பெறும் நடைமுறையை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது. சான்றிதழ்களை பெறும் சிரமங்களை போக்கவும், அலைச்சலை குறைக்கவும், “E-பெட்டகம்” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.<> இந்த செயலி மூலம் <<>>உங்கள் சான்றிதழ்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி HELP பண்ணுங்க.

News September 7, 2025

மதுரை: EEE, B.Sc, B.Tech போதும்.. ரூ.3 லட்சம் சம்பளம்

image

தாட்கோ மூலம் பலதுறைக்கான பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அவ்வகையில், தற்போது ஜெர்மனி வேலைக்கான பயிற்சியை அறிவித்துள்ளது. இதற்கு B.Sc, EEE, B.Tech IT முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ.3 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க<> இங்கே கிளிக் பண்ணுங்க<<>>. (வேலை தேடுபவர்களுக்கு SHARE பண்ணுங்க)

News September 7, 2025

மதுரையில் ரூ.2.30 லட்சம் பறிமுதல்

image

மதுரை வடக்குமாசி வீதி டாஸ்மாக் கடை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதில் கரிமேடு ராஜேந்திரன் (67), நாகமலைபுதுக்கோட்டை சக்திவேல் (44), முண்டுவேலம்பட்டி ஜெயபால் (45), பொன்னகரம் சின்னவெங்கையன் (55), ஆண்டிப்பட்டி தேவேந்திரன் (56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 283 மதுபாட்டில்கள், ரூ.2.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

error: Content is protected !!