News August 16, 2025
ரயில்கள் தாம்பரத்திற்கு மாற்றம்

எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், கடந்த ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 18 வரை சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. இந்நிலையில் கொல்லம் மெயில் மற்றும் குருவாயூர் விரைவு ஆகிய ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை தற்போது தாம்பரத்தில் இருந்து புறப்படும் நடைமுறையே தொடரும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Similar News
News August 15, 2025
செங்கல்பட்டில் கழுகுகள் வணங்கும் அதிசய கோயில்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதகிரிமலையில் உள்ள வேதகிரீஸ்வரர் கோயிலுக்கு கழுகுகள் வணங்கிய பெருமை உண்டு. கிரேதா யுகத்தில் சண்டன் – பிரசண்டன், திரேதா யுகத்தில் சம்பாதி – சடாயு, துவாபர யுகத்தில் சம்புகுந்தன் – மாகுந்தன் ஆகியோர் சாபத்தினால் கழுகுகளாக உருமாறி, வேதகிரீஸ்வரை வணங்கி சாபவிமோசனம் பெற்றனர். இங்கு வந்து சென்றால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க
News August 15, 2025
செங்கல்பட்டு: உள்ளூரிலேயே 25,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில்Assembly Line Machine Setter பணிக்கான 40 காலிப்பணியிடங்கள் உள்ளது. பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். 15,000 முதல் 25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தமிழ்நாடு அரசின் <
News August 15, 2025
தாம்பரம் மாநகராட்சியில் 19 அலுவலர்கள் பணியிட மாற்றம்

தாம்பரம் மாநகராட்சியில் பணத்தை கையாடல் செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, 5 மண்டலங்களில் பணியாற்றும் மேலாளர், கண்காணிப்பாளர்கள், நிர்வாக அலுவலர், உதவியாளர்கள், இளநிலை & வருவாய் உதவியாளர்கள், பதிவு எழுத்தர் உள்ளிட்ட 19 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே முரளி மற்றும் ரமேஷ் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.