News April 28, 2025
ரயில்களை கவிழ்க்க தொடரும் சதி

திருவாலங்காடு அருகே கடந்த 25ஆம் தேதி நட்டு, போல்டை கழற்றி ரயிலை கவிழ்க்க சதி திட்டம் தீட்டப்பட்டது. அது முறியடிக்கப்பட்ட நிலையில், நேற்று (ஏப்ரல் 27) அரக்கோணம் தண்டவாளத்தில் 5 இடங்களில் கற்கள் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முந்தினம் (ஏப்ரல் 26) அம்பத்துார் – பட்டரைவாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. மீண்டும் சதி திட்டம் தீட்டப்பட்டதா? என போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News August 11, 2025
சென்னையில் நாளை மின்தடை (1/2)

சென்னையில் நாளை (ஆக.12) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் இடங்கள். கோடம்பாக்கம், டிரஸ்ட் புரம், ஆற்காடு சாலை பவர் ஹவுஸ் முதல் ரயில்வே டிராக் வரை, இன்பராஜபுரம், பஜனை கோயில் தெரு, வரதராஜப்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் நகர் முழுப் பகுதி, ரங்கராஜபுரம் பகுதி, சூளைமேடு, துரைசாமி சாலை, சுப்புராயன் தெரு, காமராஜர் காலனி 1 முதல் 8வது தெரு பகுதியில் மின்தடை ஏற்படவுள்ளது. (<<17372710>>தொடர்ச்சி<<>>)
News August 11, 2025
சென்னையில் நாளை மின்தடை (2/2)

பெருங்குடி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செக்ரடேரியட் காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, சுங்க காலனி, அம்பத்தூர் தொழிற்பேட்டை: தெற்கு கட்டம், முகப்பேர் தொழிற்பேட்டை, அம்பத்தூர் தொழிற்பேட்டை I, 2வது பிரதான சாலை, தெற்கு அவென்யூ, ரெட்டி தெரு, கவரை தெரு, முனுசாமி தெரு, கல்யாணி எஸ்டேட் பகுதியில் மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளது.
News August 11, 2025
தெரு நாய்களுக்கு 2 தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

சென்னை மாநகராட்சி சார்பில், தெரு நாய்களுக்கு ஆன்டி-ரேபிஸ் மற்றும் ஒட்டுண்ணி மருந்து என 2 வகை தடுப்பூசிகள் செலுத்தும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கால்நடை மருத்துவ குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கு சென்று, நாய்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கோடு, நேற்று (ஆகஸ்ட் 10) முதல் இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது.