News March 28, 2025
ரயிலில் 26 கிலோ கஞ்சா பறிமுதல்

டாட்டா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த மூன்று பைகளை போலீசார் மீட்டு சோதனை நடத்தினர். இதில் 26 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Similar News
News January 1, 2026
ராணிப்பேட்டை: ரூ.50 கட்டினால் ரூ.1 லட்சம் வரை லாபம்!

ராணிப்பேட்டை போஸ்ட் ஆபிஸில் உள்ள RD திட்டத்தில் தினமும் ரூ.50 என்ற அடிப்படையில் மாதம் ரூ.1,500 கட்டினால், 5 ஆண்டு முடிவில் 6.7% வட்டியுடன் 1,07,050 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். இதே போல் 100 ரூபாய் என்ற வீதத்தில் சேமித்தால் 2,12,972 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம். எதிர்காலத்தில் இந்த தொகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டத்தில் இணைய அருகில் உள்ள போஸ்ட் ஆபிஸ் அலுவலகத்தை அனுகவும். (SHARE)
News January 1, 2026
ராணிப்பேட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

அரக்கோணம் டவுன் ஹால் கிளப்பில் நாளை (ஜன.2) தேதி மாற்றுத்திறனாளிகள் சிறப்பு வாக்காளர் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மாற்று திறனாளிகள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க நீக்க, திருத்தம் செய்ய படிவங்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் இன்று (ஜன.1) அறிவித்துள்ளார்.
News January 1, 2026
இராணிப்பேட்டையில் பாஜக சார்பில் தெருமுனை கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட பாஜகவின் விஷராம் நகர கிளை சார்பில் சிறுபான்மை மக்களுக்கு பாரத பிரதமர் மோடி வழங்கிய நலத்திட்டங்களை விளக்கி தெருமுனை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதி சனிக்கிழமை அன்று கீழ் விஷராம் குலத்து பேடு பேருந்து நிறுத்தம் அருகில் மாலை 5:00 மணியளவில் நடைபெற உள்ளது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் முக்கிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.


