News March 28, 2025

ரயிலில் 26 கிலோ கஞ்சா பறிமுதல் 

image

டாட்டா நகரில் இருந்து அரக்கோணம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று சோதனை நடத்தினர். அப்போது பொதுப் பெட்டியில் கேட்பாரற்று கிடந்த மூன்று பைகளை போலீசார் மீட்டு சோதனை நடத்தினர். இதில் 26 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து  பறிமுதல் செய்த கஞ்சாவை காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News August 9, 2025

ராணிப்பேட்டை காவல்துறை விழிப்புணர்வு செய்தி

image

ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் தினந்தோறும் சமூக வலைத்தளத்தில் விழிப்புணர்வு செய்தி வெளியிடப்படுகிறது. அதன்படி இன்று வெளியிடப்பட்ட விழிப்புணர்வு செய்தியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்ட முயற்சிக்காதீர்கள் உங்களுக்காக உங்கள் குடும்பம் காத்திருக்கிறது மதுபோதையில் பயணம் செய்வதை தவிர்ப்போம்.. பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்வோம்…என விழிப்புணர் செய்தியை வெளியிட்டுள்ளது.

News August 9, 2025

ராணிப்பேட்டையில் குடிமைப்பணிகள் தேர்வு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பபணிகள் குடிமைப்பணிகள் தேர்வுகள் வருகிற 17, 18-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 தேர்வு கூடங்களில் நடைபெற உள்ளது. தேர்வினை ராணிப்பேட்டை மாவட்டத்தில் 781 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்விற்காக கூடுதல் சிறப்பு பஸ் வசதிகள் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்

News August 9, 2025

ராணிப்பேட்டை: MRPஐ விட அதிக விலையா? இதை பண்ணுங்க

image

பேருந்து நிலையங்கள், சாலையோர மோட்டல்களில் உணவு பொருட்களை MRPஐ விட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். MRPஐ விட கூடுதல் விலைக்கு விற்பது, எக்ஸ்பயரி தேதி மாற்றி வைப்பது, வேறு ஸ்டிக்கரை அதன்மேல் ஒட்டி வைப்பது போன்றவற்றை கண்டால் FSSAIன் 9444042322 வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம் (அ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350918>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!