News October 9, 2024

ரயிலில் பட்டாசு கொண்டு சென்றால் 3 ஆண்டுகள் சிறை

image

சிவகாசியில் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு விற்பனை விறுவிறுப்படைந்துள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாடிக்கையாளர்கள் சிவகாசிக்கு நேரடியாக பட்டாசு வாங்க வருகின்றனர். பட்டாசுகளை வாங்கி செல்வோர் ரயில்,பேருந்துகளில் கொண்டு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ரயிலில் பட்டாசு கொண்டு செல்வது கண்டறியப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News

News December 11, 2025

விருதுநகர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு.

image

விருதுநகர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் அறிய 0120-4925505-ல் அழைக்கலாம். மறக்கமாக இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

News December 11, 2025

விருதுநகர் விவசாயிகளுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் டிச.19 அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். மேலும் வட்டாரத்திற்கு இரு விவசாயிகள் வீதம் பொதுவான கோரிக்கைகளை மட்டும் விவாதிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 11, 2025

விருதுநகரில் EB கட்டணம் அதிகமா வருதா?

image

விருதுநகர் மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் <>TANGEDCO<<>> என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!