News March 22, 2025

ரயிலில் கீழ் இருக்கையில் அமரும் பயணிகளுக்கு சலுகைகள்

image

முன்பதிவு ரயில் பெட்டிகளில் உள்ள கீழ் இருக்கை பயணிகளுக்கு தனி உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. இரவில் அந்த இருக்கையில் சம்பந்தப்பட்ட பயணியைத் தவிர வேறு யாரும் அமரக்கூடாது. அதேபோல், தேவையில்லாமல் தூங்கிக்கொண்டிருக்கும் கீழ் இருக்கை பயணியை எழுப்புவது, தொந்தரவு செய்வது குற்றமாகும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பயணி புகார் அளித்தால், குற்றச்சாட்டுக்கு ஆளாகும் பயணி மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஷேர் பண்ணுங்க

Similar News

News March 22, 2025

சென்னையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

image

சென்னையில் இன்று (மார்.22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அம்பத்தூர், ஆவடி, தாம்பரம் போன்ற புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் குடை அல்லது ரெயின்கோர்டை எடுத்துச் செல்லுங்கள். உங்க ஏரியாவில் மழையா?

News March 22, 2025

சென்னையில் ஐபிஎல் போட்டி: போக்குவரத்து மாற்றம்

image

சென்னையில் நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, போக்குவரத்து போலீசார் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. பார்க்கிங் இடங்கள் மற்றும் மாற்று வழிகள் குறித்த முழுமையான வரைபடத்துடன் பொதுமக்கள் இடர்ப்பாடின்றி செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் இந்த மாற்றங்களை பின்பற்றுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை காண்பித்து மெட்ரோவில் இலவசமாக பயணிக்கலாம்.

News March 22, 2025

செங்கல்பட்டு மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து

image

எழும்பூர் – விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் – செங்கல்பட்டு ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறகிறது. இதனால், இன்று (மார்.22) மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து மதியம்1.45, 2.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் பகுதி நேரமாக செங்கல்பட்டு – சிங்கப்பெருமாள் கோவில் இடையே ரத்து செய்யப்படுகிறது.

error: Content is protected !!