News October 15, 2024

ரயிலில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சா பறிமுதல்

image

புனேயில் இருந்து நேற்று நாகர்கோவில் வந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் நடத்திய சோதனையில் முன்பதிவு இல்லாத ஒரு பெட்டியின் இருக்கைக்கு கீழ் பேக் கேட்பாரற்று கிடந்தது. இதனை போலீசார் திறந்து பார்த்தபோது 7 பொட்டலங்களில் 4 கிலோ அளவுக்கு கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வரப்பட்ட கஞ்சா குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 16, 2025

வேளாண் உட் கட்டமைப்புக்கு ரூ.66 கோடி இலக்கு – ஆட்சியர்

image

குமரி மாவட்டத்தில் வேளாண் உட் கட்டமைப்புக்கான நிதியின் கீழ் கடன் வசதி திட்டத்திற்கு வேளாண்மை மற்றும் விற்பனைக்கு ரூ.14 கோடியும், வேளாண்மைத்துறைக்கு ரூ.1 கோடி இலக்கு நிற்ணயிக்கப்பட்டுள்ளது. இதே போல தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை மற்றும் மகளிர் திட்டத்திற்கு தலா ரூ.2 கோடியும், மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.45 கோடி என மொத்தம் ரூ.66 கோடி இலக்கு பெறப்பட்டுள்ளது என ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

News August 16, 2025

குமரி: ரூ.96,000 ஊதியத்தில் வேலை

image

தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி என்ற பொதுத்துறை நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 550 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு இளங்கலை முடித்திருந்தால் போதும். இதற்கு மதுரை, குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். இதில் ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள்<> இங்கே கிளிக் செய்து<<>> ஆக.30க்குள் விண்ணப்பிக்கவும்.

News August 16, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர்மட்ட விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட் 16) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை 40.67 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.32 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 9.25 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 9.55 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 1053 ( 707 ) கன அடி, பெருஞ்சாணிக்கு 421 (210) கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

error: Content is protected !!