News January 26, 2025

ரயிலில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

image

அரக்கோணம் ரயில் நிலையத்தில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2-வது பிளாட்பாரத்தின் அருகே சந்தேகப்படும் வகையில் அங்கும் இங்கும் சுற்றிக் கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கேரள மாநிலத்தை சேர்ந்த விவேகானந்தா என்பதும் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரிடமிருந்த 8½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

Similar News

News November 13, 2025

ராணிப்பேட்டை: வீட்டு உரிமையாளர்களே உஷார்!

image

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே…, வீட்டை வாடகைக்கு விடுவதற்கான விதிமுறைகளில் மத்திய அரசு சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, இனி அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் முத்திரையிடப்பட வேண்டும். இதனை ஆன்லைனில் அல்லது உள்ளூர் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம். அப்படி பதிவு செய்ய தவறினால், ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 13, 2025

ராணிப்பேட்டை கலெக்டர் அறிவிப்பு!

image

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற நவ.19ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்வு நாள் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News November 13, 2025

ராணிப்பேட்டை மக்களே.., இத மிஸ் பண்ணிடாதீங்க!

image

ராணிப்பேட்டை மக்களே.., வேலை தேடுபவரா நீங்கள்?உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’Broadband Technician’ பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியுடன் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மேலும், இதில் கலந்துகொண்டால், வேலைவாய்ப்பு உறுதி. இதில் விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. நல வாய்ப்பு, இதை உடனே அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!