News March 18, 2025

ரயிலில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவர் பலி

image

மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் விஷ்வா (20) என்பவர் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். தினமும் மின்சார ரெயிலில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வந்தார்.நேற்று வழக்கம்போல் விஷ்வா மின்சார ரெயிலில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தபோது, தாம்பரம் அருகே கூட்ட நெரிசல் காரணமாக எதிர்பாராத விதமாக ரெயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே விஷ்வா உயிரிழந்தார்.

Similar News

News September 18, 2025

செங்கல்பட்டு: கோழி திருடியதை தட்டிக்கேட்டவருக்கு வெட்டு

image

சூணாம்பேடு பகுதியைச் சேர்ந்த நாகப்பன்(46) கால்நடை மருத்துவமனை வளாகத்தில் வசித்து வருகிறார். அதே வளாகத்தில் வசித்து வரும் விஜய்(25) என்ற நரிக்குறவர், சூணாம்பேடு காலனி பகுதியில் இருந்து கோழியை திருடி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது விஜய், அருகே இருந்த அரிவாளால் நாகப்பனின் தலையில் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த நாகப்பன், செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News September 18, 2025

செங்கல்பட்டு: 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் விரைவில்.!

image

செங்கல்பட்டு: மதுராந்தகத்தில் சுமார் 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் உருவாக்க இடம் தேர்வாகியுள்ளது. இந்நகரில் வீட்டு வசதி, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, தகவல் தொழில்நுட்ப பூங்கா, வேலைவாய்ப்புகள், வணிக வளாகம், வங்கிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவை சர்வதேச தரத்தில் உருவாக்கப்படும். இந்நகரத்துடன் சென்னை போன்ற பெரு நகரங்களை இணைக்கும் வகையில் சாலை, ரயில் பாதை உள்ளிட்டவை உருவாக்கப்பட உள்ளது. SHARE

News September 18, 2025

செங்கல்பட்டில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (செப்.18) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்:
1. தாம்பரம் – ஜெயகோபால் கரோடியா பள்ளி
2. திருப்போரூர் – எப்.பி.சி திருமண மண்டபம்
3. பரங்கி மலை – டபேலா ஹால்
4. காட்டாங்குளத்தூர் – எஸ்.எச்.ஜி கட்டடம்
5. சித்தாமூர் – தாத்தா ரெட்டைமலை சீனிவாச திருமண மண்டபம்
ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் நேரில் சென்று மனுக்களை அளிக்கலாம்

error: Content is protected !!