News March 30, 2025

ரம்ஜான் பண்டிகைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்றுடன் (மார்ச்.30) நிறைவு அடைகிறது. அதனை எடுத்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கான பிறை இன்று (மார்ச்.30) பார்க்கப்பட்டது. மேகம் தெளிவாக இருந்ததால் முதல் பிறை தெரிந்ததை அடுத்து நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராமநாதபுரம் மாவட்ட அரசு ஹாஜி வெளியிட்டுள்ளார். எனவே நாளை (மார்ச்.31) இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட உள்ளனர்.

Similar News

News April 1, 2025

பிரதமர் வருகை – மீன் பிடிக்க தடை  

image

பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி ஏப்.6ல் திறந்து வைக்க உள்ளார். இதன் பாதுகாப்பு கருதி மண்டபம் விசைப் படகுகள், நாட்டுப் படகுகளுக்கு ஏப். 4, 5, 6ல் மீன்பிடி அனுமதி சீட்டு நிறுத்த கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தல் படி 3 நாட்களுக்கு மீன் பிடி அனுமதிச்சீட்டு நிறுத்தப்படுகிறது. இவ்வாறு மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

News April 1, 2025

ராமநாதபுரத்தில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒர வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக ஏப்.4,5 அன்று விருதுநகர், தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 1, 2025

ராமநாதபுரத்தில் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

image

ராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் உள்ளநீச்சல்குளத்தில் நீச்சல் பயிற்றுநர்களை கொண்டு நீச்சல் பழக 12 நாட்கள் பயிற்சி வகுப்புகள் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது. முதல் தொகுப்பு ஏப்.01 – ஏப்.13, இரண்டாம் தொகுப்பு ஏப்.15 – ஏப்.27, முன்றாம் தொகுப்பு ஏப்.29 – மே11, நான்காம் தொகுப்பு மே.13 – மே.25, ஐந்தாம் தொகுப்பு மே.27 – ஜூன்.8 வரை வகுப்புகள் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 99766 91417 தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!