News March 28, 2024
ரத்த சோகையிலிருந்து மீண்ட கா்ப்பிணிக்கு வளைகாப்பு

தஞ்சாவூா் மாவட்டம் கரந்தை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மூலம் மீண்ட பூனம் என்ற கா்ப்பிணி பெண்ணுக்கு நேற்று(மார்ச் 27) வளைகாப்பு விழா நடைபெற்றது. கரந்தை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த விழாவில் மாநகர நல அலுவலா் சுபாஷ் காந்தி தலைமையில், மருத்துவா் கே.மணிமேகலை முன்னிலையில் பூனத்துக்கு வளைகாப்பு நடைபெற்றது.
Similar News
News November 6, 2025
தஞ்சை: கல்லணையில் மூழ்கி பரிதாப பலி

துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் பழனிசாமி ( 45). கல்லணைக்கு வந்த இவர் காவிரி ஆற்றின் படித்துறையில் இறங்கி கை, கால் கழுவினார். அப் போது அவர் எதிர்பாராதவிதமாக ஆற்றில் தவறி விழுந்தார். உடனே கரையில் இருந்தவர்கள் ஓடி சென்று அவரை தூக்கினர். அப்போது பழனிசாமி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து அவருடைய மனைவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
News November 6, 2025
தஞ்சை: ரயில் மோதி துடிதுடித்து பலி!

தஞ்சாவூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் பாதையில் சன்னாபுரம் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தார். இதுகுறித்து திருவிடைமருதூர் கிராம நிர்வாக அலுவலர் கும்பகோணம் ரயில்வே காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், நிகழ்விடத்திற்கு போலீசாருடன் சென்று சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்.
News November 6, 2025
தஞ்சை: 10th போதும் அரசு வேலை-தேர்வு இல்லை!

அணுசக்தித் துறையில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 405
3. கல்வித் தகுதி: 10th & ITI Pass in respective trades
4.சம்பளம்: ரூ.9,600 – ரூ.10,560
5. கடைசி நாள்: 15.11.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க…


