News October 25, 2025
‘ரத்தக் கையெழுத்து’ இயக்கத்தை தொடங்கிய ஆர்.பி.உதயகுமார்

இன்று மதுரை திருமங்கலத்தில் வருகிற அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கு வருகை தரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க ‘ரத்தக் கையெழுத்து’ இயக்கத்தை தொடங்கியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். இதில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News January 29, 2026
வயிற்று வலி தாங்காமல் போட்டோகிராபர் தற்கொலை

திருமங்கலம் பாண்டி மகன் அசோக்குமார்(21). இவர் கேஎம் பிளக்ஸ் ஷாப்பில் போட்டோகிராபராக வேலை பார்த்தார். இவருக்கு வயிற்று வலி இருந்துள்ளது. நேற்று தாய் முத்துலட்சுமியிடம் வயிற்று வலிப்பதாக கூறி மெடிக்கல் ஷாப்பில் மாத்திரை வாங்கி வர சொல்லி அனுப்பி உள்ளார். அவர் வெளியில் சென்று திரும்பிய போது வீட்டில் இவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 29, 2026
மதுரை: இனி ரேஷன் கடைக்கு செல்ல வேண்டாம்!

மதுரை மக்களே; ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News January 29, 2026
மதுரை: சமையல் சிலிண்டர் வாங்குவோர் கவனத்திற்கு!

மதுரை மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? இங்கு<


