News November 13, 2025
ரஜினி, கமல் படத்தில் இருந்து சுந்தர் சி விலகினார்

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்க இருந்த படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர் சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தவிர்க்க இயலாத காரணத்தால் படத்தில் இருந்து வெளியேறுவதாக தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். இருவர் மீதும் தனக்கு அளவில்லாத மரியாதை இருப்பதாகவும், ஆனால் இணைந்து பணியாற்றக் கூடிய சூழல் இப்போது இல்லை எனவும் கூறியுள்ளார். நல்ல படங்கள் மூலம் தொடர்ந்து மகிழ்விப்பேன் என்றும் தெரிவித்தார்.
Similar News
News November 13, 2025
ரிலீசுக்கு முன்பே ₹325 கோடி ஈட்டிய ‘ஜனநாயகன்’

ரிலீசுக்கு முன்பே விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ கோடிகளை குவித்து வருகிறது. தமிழக திரையரங்க உரிமை ₹100 கோடிக்கும், வெளிநாட்டு உரிமைகள் ₹80 கோடிக்கும், ஆடியோ உரிமை ₹35 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளன. மேலும் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் ₹110 கோடிக்கு வாங்கியுள்ளது. இதுவரை படத்தின் மொத்த வருவாய் ₹325 கோடியை தாண்டியுள்ளது. பொங்கல் வின்னராக மாறுவாரா ‘ஜனநாயகன்’..?
News November 13, 2025
விஜயகாந்த் வீட்டில் போலீஸ் குவிப்பு.. பதற்றம் உருவானது

சமீப காலமாக, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்று, பிரேமலதா விஜயகாந்த் வீட்டுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸ் குவிக்கப்பட்டு அங்கு சோதனை நடைபெற்றது. ஆனால் இது புரளி என்பது சோதனையில் தெரியவந்தது. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், KS ரவிக்குமார், சாக்ஷி உள்ளிட்டோர் வீடுகளுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
News November 13, 2025
ONGC-ல் வேலை.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

ONGC-ல் காலியாக உள்ள 2,623 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18- 24 வயதுக்குட்பட்ட 10-வது, 12-வது, ITI, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். Merit List & Certificate Verification மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹8,200- ₹12,300 வரை மாதச்சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <


