News November 23, 2025
ரஜினியுடன் 3-வது முறை இணைகிறாரா?

ரஜினி 173 படத்தின் இயக்குநர் இவரா அவரா என ஆயிரக்கணக்கான கதைகள் இணையத்தில் உலா வருகின்றன. ஆனால் ரஜினி இன்னும் எந்த இயக்குநரையும் இறுதி செய்யவில்லை. இதனிடையே நேற்று விமான நிலையத்தில் பா.ரஞ்சித்தை எதிர்ச்சையாக ரஜினி சந்தித்து பேசினார். உடனே பா.ரஞ்சித்துடன் 3-வது முறையாக சூப்பர் ஸ்டார் இணையப்போகிறார் என்ற கதைகள் வர தொடங்கியது. ஏற்கனவே இருவரும் சேர்ந்து கபாலி, கலா ஆகிய 2 படங்களில் பணியாற்றினர்.
Similar News
News February 14, 2026
தேவைகளைக் கூச்சப்படாமல் கேளுங்கள்: பிரதீப்

கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில், தங்களுக்கான தேவைகளை கூச்சப்படாமல் கேட்க வேண்டும் என்று நடிகர் பிரதீப் ரங்கநாதன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். வாழ்க்கை மிக சிறியது; நமக்கான தேவைகளை கேட்க எப்போதும் கூச்சப்படாதீர்கள். பிறர் என்ன நினைப்பார்கள் என யோசிக்காமல் தைரியமாக கேட்டு விடுங்கள்; கேட்டு மறுக்கப்பட்டால் ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், அது கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது என கூறியுள்ளார்.
News February 14, 2026
பிப்ரவரி 14: வரலாற்றில் இன்று

*1924 – ஐபிஎம் (IBM) நிறுவனம் அமைக்கப்பட்டது.
*1998 – கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர்.
*2019 – புல்வாமா தாக்குதல் நடத்தப்பட்ட நாள்
*1483 – முகலாயப் பேரரசர் பாபர் பிறந்த தினம்
* 1952 – சுஷ்மா சுவராஜ் பிறந்த தினம்
* காதலர் தினம்
News February 14, 2026
சவப்பெட்டியோடு TVK கூட்டத்திற்கு போகணும்: ADMK

சேலம் தவெக கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததை எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யன், தவெக கூட்டத்திற்கு செல்வதாக இருந்தால், இனிமேல் சவப்பெட்டியோடு தான் செல்ல வேண்டும் என காட்டமாக கூறியிருக்கிறார். ஏற்கெனவே, த்ரிஷாவிடம் இருந்து விஜய் வெளியே வரவேண்டும் என நயினார் கூறியிருந்த நிலையில், கோவை சத்யனின் பேச்சும் சர்ச்சையாகியுள்ளது.


